தமிழகத்தில் 52 பிரதான கோவில்களில் இன்று முதல் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கருவறை உள்ளிட்ட இடங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து பக்தர்கள் ரீல்ஸ் பதிவிடுவதை தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 5 ரூபாய் செலுத்தி, செல்போன்களை பாதுகாப்பாக வைத்து விட்டு கோவிலுக்குள் செல்வதற்காக பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்துவதற்காக ஜிபே வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 52 பிரதான கோவில்களில் இன்று முதல் செல்போன்களுக்கு தடை..!
By Dhallo News · September 1, 2026 at 1:07 PM IST

Source: POLIMER News
Original reporting: POLIMER NewsRead original report →
Have feedback on this article?Report error or suggestion
